|
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
ஆவியி னிடத்துற் றெம்முகப் பகையென் றம்புயத் தினைப்பிடித் திழுப்ப மேவுவெண் பற்சொற் பகையெனு மணிகள் வெருவிவந் தடியின்மேல் வீழக் காவியங் கருங்கட் பகையெனு மளிகள் கலங்கியெண் டிசைதொறு மிரியப் பூவையர் மகிழ்வுற் றுலாவுறும் வெங்கை புரத்தனெங் கருத்தன்வே றிலையே.
|
(98) |
|