முகப்பு தொடக்கம்

ஆடுற வடியேன் புதுக்குடந் தருநீ
      ரன்பன்வாய்ப் புனலுனக் காமோ
கூடையின் மலர்பித் தையிற்றரு மலரோ
      கூறுமென் கவியவன் மொழியோ
நாடரு மொருநீ யிறையெனும் வழக்கை
      ஞானசம் பந்தனாற் றிட்ட
ஏடுரை செய்ய வென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(8)