முகப்பு தொடக்கம்

ஆற்றற் பெரியோ ராற்றுவார்க்
       காற்றல் பசியை யாற்றுதலென்
றறைந்த மொழியைக் கடந்துசிவ
       னடியா ரெனுநல் விருந்தழைத்துச்
சோற்றுக் குவடு மொலைத்தசிறு
       தொல்லைப் பூத மொருகோடி.
தொலைத்தற் கரிய செஞ்சாலிச்
       சோறுங் கறியுங் கைகவிப்ப
ஊற்றற் கமைத்த பாறயிர்நெய்
       யுதிர்தீங் கனியு முறைமுறையே
யொழுகு பந்தி பலவிருத்தி
       யுவந்து படைத்துத் தீப்பசியை
மாற்றிப் பெருஞ்சீர் பெறுதற்கு
       வல்லாய் தாலோ தாலேலோ
மயிலை வரையிற் சிவஞான
       மணியே தாலோ தாலேலோ
(1)