|
ஆர்க்கு மதுரச் சங்கமளித் தரவ மடுத்த பெருங்கங்கை யாறு மடுத்துப் பிறைத்தோணி யமர்ந்து சடைச்செந் துகிப்படர்ந்து பார்க்கு முமைகட் கயலுலவும் பழைய கருணைக் கடலகத்துப் படிந்து பரக்கும் புறச்சமயப் பாம்பு பதைப்ப விடித்துமயல் போக்கு மயிலை வரையிவர்ந்து பொருண்மா மாரி மிடிக்கோடை பொன்றப் பொழிந்து புகழ்வெள்ளம் பொருப்பு வாளக் கரைவாவி தேக்கு முகிலே யமுதேசெந் தேனே தாலோ தாலேலோ தேடற் கரிய சிவஞான தேவே தாலோ தாலேலோ.
|
(3) |
|