முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
இன்றுவர்வாய் மகளிர்மய லுறாதென்று மெனைத்தடுத்தா
       ளிசையக் கொண்டாய்
வென்றிமலி துறவியா தலினீயம் மாதொருபால்
       விழைந்து வைத்தோன்
முன்றமர்செய் மணம்விலக்கி வலிந்தாட்கொண் டிருமாதர்
       மோக வேலை
யன்றமிழ நம்பியைச்செய் தனன்சிவஞா னிப்பெரும்பே
       ரடைந்து ளோயே.
(80)