முகப்பு தொடக்கம்

 
பாங்கன்றலைவனை யுற்றதுவினாதல்
இலங்கா புரிமன்னன் றோளிற வூன்றிய வீசர்வெங்கை
உலங்கா தலிக்குந்திண் டோளுர வாகட லூர்ந்திடினும்
விலங்கா மறலி யொருகோடி தூதொடு மேல்வரினுங்
கலங்கா வுளமுங் கலங்கிநின் றாயென்ன காரணமே.
(43)