முகப்பு தொடக்கம்

 
பாங்கியறியாள்போன்றுவினாதல்
இஞ்சிப் புரமொரு மூன்றெரித் தார்வெங்கை யீர்ம்பொழில்வாய்ப்
பஞ்சிற் சிறுதளிர் மெல்லடி மாதர் பலரினுந்தான்
வஞ்சித் தெமையெம் முடனே யிருப்பினும் வந்துனது
நெஞ்சிற் புகுந்து மறைந்தவள் யார்சொன் னெடுந்தகையே.
(87)