முகப்பு
தொடக்கம்
இறைவி கையிறையேற்றமை பாங்கி இறைவற்குணர்த்தல்
இரைத்துப் பொருகங்கை வேணியர் வெங்கை யிறைதழையென்
றுரைத்துக் கொடுத்தலு மோடிவந் தேற்ற துயிர்த்துமுத்தம்
நிரைத்துக் கிடக்கு முலைமே லழுத்தின ணேரிழைதான்
அரைத்துக் குடித்தில ளன்பசெய் யாதது மவ்வளவே.
(132)