முகப்பு தொடக்கம்

 
வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல்
என்பொருட்பிரிவுணர்த் தேந்திழைக்கென்றல்
இடைநிலை யாம்பொரு ளுண்டேன் முதனிலை யெய்தறமுங்
கடைநிலை யாமின் பமுமேவு மென்றனர் காதலரென்
றடைநிலை யாம்பதத் தெம்மான் றிருவெங்கை யாயிழைக்குத்
தொடைநிலை வார்குழற் பூங்கொடி யேசென்று சொல்லுகவே.
(263)