முகப்பு தொடக்கம்

 
மன்றன்மனைவரு செவிலிக் கிகுளை யன்புறவுளர்த்தல்
இலரு முளரு மலர்வெங்கை வாண ரிமயவெற்பில்
அலரு மலரு மலர்த்துவெய் யோனுமன் றொன்றற்கொன்று
மலரு மிருபொரு ளுண்டாயின் மங்கைக்கு மன்னவற்கும்
பலரு மிசையவொப் பாகுமன் னேயிப் படியகத்தே.
(374)