முகப்பு தொடக்கம்

 
கட்டளைக் கலித்துறை
இரவாம லொன்று மயலோ ரிடைச்சென் றிரப்பவர்க்குக்
கரவாம லென்று மிடரே புரியுங் கடும்புலனிற்
பரவாமல் வெங்கை புரிவாணற் கன்பறும் பாதகரை
விரவாம னின்றவர் தாமே பரகதி வேண்டினரே.
(82)