முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
இரையும் புனற்செஞ் சடைமுடியுங் கடுவார் மிடறு மிளமதியம்
புரையுங் கனலி மருப்பொளிருந் திருமார் பகமும் புலியதள்சூழ்
அரையுங் கரியின் றலைமிதித்த வழகார் வெங்கை யரன்றாளும்
நிரையுஞ் சுரர்கண் டுருவனைத்து மருளே யென்ன நினைவாரே.
(99)