முகப்பு தொடக்கம்

இழையெனத் தளர்சிற் றிடையுணா முலையா
      ளெனக்குவண் புகலிவேந் தயின்ற
கழுமணிப் பசும்பொற் குலவுபாற் கிண்ணங்
      கழுவுநீர் வார்ப்பதற் குரையாய்
முழையிடைக் கதிர்மா மணிவிளக் கேற்றி
      முசுக்கலை பிணாவொடு மசோகத்
தழையிடைத் தழுவி யுறங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(45)