முகப்பு தொடக்கம்

இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங்
      கொலைவேட னெனினும் பொல்லாப்
பழிமருவு பதகனெனி னும்பதிக
      னெனினுமிகப் பகரா நின்ற
மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்
      றொருமுறைதான் மொழியி லன்னோன்
செழியநறு மலரடியின் றுகளன்றோ
      வெங்கள்குல தெய்வ மென்ப.
(11)