முகப்பு தொடக்கம்

இயலு மொருகுட வானை யதனுளி ருக்கவா
       னெனவ றிவுறவு பாதி யறவறி வித்தல்போல்
உயலி லுடலிலுண் மேவு முயிர்பிர மத்தின்வே
       றொழிய வொருபொரு ளாகு மெனவறி வித்தவா
செயலொ டுரைமனம் யாவு மதியம ருட்டுமோர்
       திலக நுதலுமை பாகர் பணிசெய வுய்த்துவாழ்
மயலி லடியவர் நேச பணிமணி முத்தமே
       மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.
(10)