முகப்பு தொடக்கம்

இரவின் முயல்வார் மிடியினா லிரங்கா வுளத்த னெனப்படுத
       லிருளாற் பகைஞ னெனப்படுத லிறவாக் கொடுந்தீ வினையினால்
பொருவில் கொலைஞ னெனப்படுதல் பொய்யாற் பொய்ய னெனப்படுதல்
       பொறாமை யதனா லிவனென்றும் பொறாமை யினன்கா ணெனப்படுதல்
வெருவு முடம்பி னிடும்பையினால் விளங்க வறியா னெனப்படுதல்
       வெகுளி யதனாற் றரியாத வெகுளி யினனா மெனப்படுதல்
மருவி யுலகில் வருங்கருணை வடிவே வருக வருகவே
       மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
(5)