|
இரவடைவை நீயிரவை யடையா னிவன்கலை யெண்ணிரண் டுடையையிவனெண் ணெண்கலை கடந்தவன் மறுவுண் டுனக்கிவற் கில்லையா லோர்மறுவுநீ மருவுமரை நாணிலவை யிவனென்று மழியாது வருபெரும் புகழ்நிலவினான் வளர்குழவி யிற்றொழு வதற்குரியை நீயிவன் வணங்கியிட வென்றுமுரியான் விரவுபெண் மயலுடைப் போகிநீ யிவன்மயலை மேவாத பரமயோகி விடையுடைப் பாகன்முடி யிற்பொறையை நீயிவன் விளங்குதளிர் மென்கையில்விடா தரவவணி யற்பொறுப் பவனாத லால்விரைந் தம்பிலீ யாடவாவே யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட னம்புலீ யாடவாவே.
|
(1) |
|