முகப்பு தொடக்கம்

 
பன்னிருசீர்க்கழிநெடிலடி வண்ணவிருத்தம்
ஈதற மன்று தனித்தே யானுறு கின்ற தலத்தே
       ஏகினை என்கை பிடித்தே யேதமி தெங்கள் குடிக்கே
மீதுறு கொன்றை மணத்தால் வேணியி லிந்து வுருப்போல்
       வீறுகிர் கொங்கை யுறுத்தால் வேல்விழி முந்து சிவத்தால்
கோதித ழின்று வெளுத்தாற் கோளனை கண்டு கறுப்பாள்
       கோதையர் வம்பு தொடுப்பார் கோடுர மஞ்ச ணிறத்தால்
மாதுமை கண்டு கொதிப்பாண் மாபுகழ் வெங்கை புரத்தோய்
       மாறுவை யன்பு பினைத்தான் மாழ்குவ னென்று மிளைத்தே.
(72)