முகப்பு
தொடக்கம்
உருவஞ் சுவைநிறை வாகிய மூன்று முவந்துகொண்டு
மருவங்க முள்ள முருவக லாதுள்ள வாறுநின்றாய்
அருவன் றுருவன் றருவுரு வன்றி யறிவுருவாய்க்
கருவன் றுலகம் படைத்தாடு மென்கைக் கறைக்கண்டனே.
(29)