முகப்பு தொடக்கம்

உயங்குநூ லிடைப்பூங் கோதைய ரல்கு
      லொளிமணிப் பாம்புதீண் டுதலால்
மயங்குவேன் றனக்குன் பதமருந் துதவி
      மயக்குமென் றொழித்தருள் புரிவாய்
முயங்குமா புகழ்ப்பூம் புகலியந் தணர்க்கு
      முத்துவெண் பந்தரீந் தகல்வான்
தயங்குமீன் முத்துப் பந்தர்வாழ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(28)