|
உருக்கிளரும் வடிவென்று நிலையாத விடயத்தி லுழலும் புலன்களென்று மொழிகின்ற புத்தியது தானென்றும் விரிவாகி யொன்றாய குணமதென்றும் பரக்குமிவை யன்றன்று புருடனே யென்றுமுயர் பகுதியே யென்றுமதன்மேற் பரவிந்து வென்றுமவை யன்றியே மனமொழி படாதவொரு பிரமமென்றும் விரிக்கிலிது நிறைவென்று மணுவென்று மொன்றென்றும் வேறுபற் பலவென்றுமெய் விளைவென்று மிலதென்று முயிரியல்பு பலசமயர் வேறுவே றாகவைத்துத் தருக்கமிடு கலகமற வந்தகரு ணாகரா சப்பாணி கொட்டியருளே தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே சப்பாணி கொட்டியருளே.
|
(3) |
|