முகப்பு தொடக்கம்

உரைமன மிறந்தவொரு தனிநிலைமை யிதுவென்ன
       உள்ளபடி முனிவர்நால்வ
ருணர்ந்திட வணர்த்துதற் குற்றதவ யோகத்தி
       னொண்ணுதற் கண்டிறந்து
பொருமதனை வென்றனன் பரமனென் கின்றசிறு
       புகழன்றி யோகநிலைமை
பொன்றியங் கவன்வென்றி கொள்ளலாற் படுதோல்வி
       பொன்றலற வெய்தினனெனும்
வரைவில்சிறு மொழிபுகா தெண்ணிலோ ருணரவரு
       மறைமுடி வுணர்த்தி வெய்ய
மதனன்வந் தொருகணமு மெதிர்நிலா தொழுகுதவ
       மாயாத நிலையினுடனித்
தரையினிடை வந்தருளு மெம்பரம யோகியே
       சப்பாணி கொட்டியருளே
தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே
       சப்பாணி கொட்டியருளே.
(5)