முகப்பு தொடக்கம்

உந்துமா ரருள்பிறந் தெழுதரு மிவன்றிரு
       வுள்ளத்து முனிவில்லையென்
றுன்னல்சிறு விதிமகத் துறுமமரர் தம்மையு
       முன்றனையு மமர்குறித்து
வந்தமா மதனையுங் கண்புன றுளிப்பவே
       மனமுருகி மெய்யன்பினான்
மலர்கொண்டு பூசனை தொடங்குமொரு தொண்டன்மேல்
       வஞ்சினங் கொண்டுவெம்பிச்
சிந்துமா ரழல்விழிப் பணைமருப் பெருமையிற்
       சென்றகொடு மறலிதனையுஞ்
சிரமைந்தொ டைந்துடைய திரள்புயத் தெறுழ்வலித்
       தீயனையு முன்வெகுண்ட
அந்தவா சனையிருப் பினுமிருக் குங்கடிதி
       னம்புலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
       னம்புலீ யாடவாவே.
(4)