முகப்பு தொடக்கம்

 
பாங்கிவிலக்கல்
ஊனா ருடலி னுயிர்போல வேயவ் வுயிரினுயிர்
தானா மொருவன் றிருவெங்கை வெற்பிலுன் றன்பதிக்குப்
போனால் விரைந்து வருவா யலையன்ப போகலைநீ
யானா யிழைதுயர் கண்டாவி கொண்டிங் கிருக்கிலனே.
(252)