முகப்பு தொடக்கம்

ஊழுறு மணிப்பொற் கோயில்போய் வாவ
      லுறக்கொடுத் தாங்குநிற் புணர்த்தாப்
பாழுறு மனம்பே ரவாக்குடி யிருப்பப்
      பண்ணுமென் கண்ணுநண் ணுவையோ
வீழுறு மெயினர் கிழங்ககழ் குழியும்
      வேழம்வீழ் குழிகளு நிரம்பத்
தாழுறு மருவி பொன்சொரி சோண
      சைலனே கைலைநா யகனே.
(66)