முகப்பு தொடக்கம்

 
தாழிசை
ஊசலாடுறு நெஞ்சொடும்பிட ருற்றவெற்றிகொள் காலனை
       யுணர்ந்திலேன்பய மற்றுவேண்டிய துண்டுடுத்துழன் றொண்மலர்
வாசமார்குழல் மாதரார்செயு மாலின்மூழ்கின னத்துயர்
       மாறுமாறுநி னைந்திலேனரி வாய்தலிற்படு மனையின்வாய்
தூசுலாமணை மீதுவாள்விழி துஞ்சவீழ்பவர் போலவே
       தொண்டர்தந்துயர் கண்டிராது துடைக்குறுஞ்சிவ ஞானிநீ
ஆசுதீரருண் மிகுதிகாணிய வஞ்சலென்றருள் செய்தியோ
       அருண்மறைத்து விடுத்தியோசொ லறிந்திலேன்றிரு வுள்ளமே
(38)