முகப்பு
தொடக்கம்
பாங்கிமதியுடன்பாடு
தோற்றத்தாலாராய்தல்
எனையா டியபதந் தாள்வோன் றிருவெங்கை யேந்திழைநீ
சினையா டியமணிப் பொன்னூச லாடிச் செழுங்குவளைச்
சுனையாடி வண்டல் விளையாடி முத்தந் துவன்றியவம்
மனையாடி வந்தனை யோதிரு மேனி வருந்தியதே.
(66)