|
எல்லாத் தேவர் தமதுயிரு மிமைப்போ தினிலுண் கரியகடு வீன்ற வோதைக் கடன்முத்த மெனைத்தும் வேண்டே மெழின்மதவேள் வில்லாய்க் கொலைசெய் தொழில்படைத்த வேழக் கரும்பின் வெண்முத்தம் விரும்பே மலர்ப்பூம் பொழிற்றிருநெல் வேலிப் பதியின் வேய்முத்தம் அல்லாற் கருங்காட் டுயிரனைத்து மலமந் தழியக் கதழெரியை யாக்க நெடிய வேய்முத்த மணுகேஞ் சிறிது மருளின்மொழி செல்லாப் பவளத் திருவாயாற் செல்வா முத்தந் தருகவே திளைக்குங் கருணைச் சிவஞான தேவாமுத்தந் தருகவே.
|
(2) |
|