முகப்பு
தொடக்கம்
கட்டளைக்கலித்துறை
எனக்குப் பிறப்பில்லை யென்றே கனன்மழு வேந்துவன்யான்
நினக்குக் கருணையென் மேற்றா தலினின் னிலைமைகண்டே
எனக்குப் பிறப்புண்டென் பார்சிவ ஞானி யிருநிலத்தில்
நினக்குப் பிறப்புண்டென் பாரல ரோவவர் நிந்தைசெய்தே.
(82)