முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
ஐய மயிலைச் சிவஞானி யந்தோ நம்மாற் செயப்பட்ட
உய்ய வரிய பாதகங்கட் கொழிக்கு முபாய மிலையென்று
நையு மனிதர் நினதுதிரு நாமத் தெழுவா யெழுத்திரண்டும்
பைய வொருகா லியம்பியுய்யப் பற்றார் துயரி னுற்றாரே.
(28)