முகப்பு
தொடக்கம்
நேராதிறைவி நெஞ்சொடுகிளத்தல்
ஒலியா லசையச் சருகெழத் தோகை யுடன்குதிப்பப்
புலியா வெனவெழக் குஞ்சர மோடப் புளிநரெல்லாம்
மெலியா விரையும் வனத்தே யிறைதிரு வெங்கைவெற்பில்
மலியா ரிருள்வர நெஞ்சமெவ் வாறு வலிப்பதுவே.
(173)