முகப்பு தொடக்கம்

ஒருவாறு மின்றியிது வென்றுணர வரியபர
       மொன்றிரண் டாகியவைமூ
வுருவாகி மூவிரண் டாறாறு வகையிரட்
       டுற்றநூற் றெட்டுவிரிவாய்
இருவாறு நின்றிலகி யிருநூறு தலையிட்ட
       வீரெட்டு மாறாறினவ்
வெண்பெற்ற வாறினவ் வாறுமூன் றினிலவை
       யிரண்டினி லிரண்டுமொன்றில்
மருவா வடங்கிநீ நானென்னு மயலின்றி
       மனவா சகங்கடந்து
வந்துகூ டுதலகற லின்றிநின் றிடுநிலையை
       மலரடி முடிக்களித்துத்
திருவாய் மலர்ந்தெனக் கொருமொழியி லருள்பவா
       செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ
       செங்கீரை யாடியருளே.
(3)