முகப்பு தொடக்கம்

 
வேறு
ஒருமா யையினுயிர் மாபரம் வேறா மாபோலு
       முதுபோ மெனினிலை பேதமெனாவோ தாவீயா
வருமா மறையுரை யாடலும் வேறா மான்மாவோ
       டருளார் பதியியல் பாயென வோதா மாறாவாய்
வருமா கமமுரை யாடலு மாரா யாராயே
       மலைவா துசெய்மய லாலுள மோவா நோவாவார்
செருமாய் வுறுமொரு வாசக தாலோ தாலேலோ
       சிவஞா னியெனுயிர் நாயக தாலோ தாலேலோ.
(9)