முகப்பு தொடக்கம்

ஒற்கவிர வோர்களிலெ னப்புகல்வ தேநீ
       யுற்றொருவர் பாலுமுளை வுற்றுரைசெய் யாதே
நிற்கநனி யீகைவினை பெற்றிடுகை யாலே
       நித்தமது கோறனினி யற்கைநின தார்சீர்
கற்குமடி யேமிரவ கற்றிலெனு மீதுங்
       கைத்தடியி னாலிவண ழித்தறகு மோகாண்
சிற்கனசி வானுபவ சிற்றில்சிதை யேலே
       சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே.
(9)