முகப்பு தொடக்கம்

 
புணர்தல்
ஓர்போ தெனும்பிறை வேணியிற் சூடு மொருவர்வெங்கை
தேர்போ லகன்ற மணியல்கு லாயிரு செய்யவிள
நீர்போ லமைந்தின்ப மேதிரண் டாங்குறு நின்முலைகள்
மார்போ டழுந்தத் தழுவவென் னான்செய்த மாதவமே.
(183)