முகப்பு
தொடக்கம்
அவனவட்புலம்பல்
ஓடுந் தடங்கண் மணற்கேணி யாகவவ் வூற்றிறைக்கும்
நீடும் புளின முலையாக் குறைவு நிறைவுமின்றிச்
சூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
பாடுஞ் சுரும்பலர் மொய்குழ றேம்பிப் பதைத்திடுமே.
(276)