முகப்பு தொடக்கம்

ஓகைமலி குருவாணை யுறுவிக்கு மாணையு
        முயர்புரா தனசரிதமோ
    டொக்குநடை வருவிக்கு முவமையுந் தன்மகனை
        யொண்சுவத் திகமேற்றுபு
சோகமறு மனுமயஞ் செய்தமைத் திடுமொரு
        சுவத்திகா ரோகணமுநூல்
    சொல்லிய விடங்களிற் றூயநீ றணிதருந்
        தொல்விபூ திப்பட்டமும்
மாகலச நீராட்டு கலசாபி டேகமு
        மருவுசிவ நோக்குவிக்கும்
    வயங்குலிங் காயதமு மன்னுசிவ லிங்கமுரு
        வனைசுவா யதமுமெனுமேழ்
ஆகுநெறி தான்மருவி யாகமிசை யிலகுமர
        னபிடேக மாடியருளே
    அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
        யபிடேக மாடியருளே.
(6)