முகப்பு
தொடக்கம்
தலைமகளோடு கலந்துறுந்தலைமகன் கார்ப்பருவங்கண்டு கனித்தியம்பல்
கயலே யனைய விழியாளும் யானுங் கலந்துபுணர்
செயலே மருவி யிருக்கின் றனமலர்த் தேனொழுகி
வயலே விளையுந் திருவெங்கை வாணர் வரையில்வரும்
புயலே யினிமதி யொன்றின்முக் காலும் பொழிபொழியே.
(426)