முகப்பு தொடக்கம்

 
தலைமகள் முன்பனிப்பருவங்கண்டு வருந்தல்
கருங்காள கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
பொருங்கா வலர்தம் பகைதணிப் பான்முனம் போயினவர்
பெருங்கால முன்பனி நாள்வந்தும் வந்திலர் பேதையர்மேல்
வருங்காம வெஞ்சரந் தன்னையு மாற்ற மனமதித்தே.
(416)