முகப்பு தொடக்கம்

 
தான்குறி மருண்டமை தலைவி யவட்குணர்த்தல்
கானலை வேனின் முதிர்வா லெதிருறக் கண்டுமறி
மானலை நீரென வோடுதல் போல்வெங்கை வாணர்வெற்பிற்
றேனலை வார்தொடை யார்குறி யாமெனச் சென்றுநைந்தேன்
பானலை வென்றகண் ணாய்குறி வேறுறப் பைம்பொழிற்கே.
(194)