முகப்பு தொடக்கம்

கானமே மருவும் விலங்கினுங் கடையேன்
      கற்பவை கற்றிலேன் விடய
ஞானமே யுடையே னறிஞரைக் காணி
      னாணிலே னுய்யுநா ளுளதோ
வானமே யளவு நெடுங்கிரி மலய
      வாதமோ துறுபவர் கட்குத்
தானமே யுதவ வளர்ந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(59)