|
காற்றுமறைப் பாயபடப் பாயலிடை மடங்கற் கனலருகி னரிசனப்பொற் றூசுமிசை போர்த்துக் கோற்றொடிமென் முலைமடந்தை தனைமார்போ டணைத்துக் குளிர்குடையா னுததியிடைக் கண்டுயில்வோ னெழுந்து போற்றிநின தெதிர்குறிப்பச் சங்கொடும்வந் துற்றான் புண்டரிகன் கரகநீர் கொண்டுதவ நின்றான் சீற்றமறுந் தவக்களிறே யெங்கள்சிவ ஞான தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.
|
(3) |
|