முகப்பு தொடக்கம்

காளம் புரைந்தநெட் டுடலழற் கட்கொடிய
       காலன்வந் தான்வந்தனன்
கண்டவா றிஃதுரைத் தனமுரைத் தனமென்று
       கைதட்டி விடுவதென்ன
வேளம்பு தைத்தலறும் வன்னெஞ்ச ரிவ்வுலக
       மெய்யென்ப திலையென்பவர்
விரிசடைக் கடவுளடி யவர்வரவு கண்டுள்ள
       மிக்கெழு மகிழ்ச்சியென்ன
வாளம்பு யத்துணர்ப் பதமுக்க ணிறைபுக
       ழழித்தபுன் சமயமென்புள்
ளணிகடிவ தென்னமழ விடையொன் றுகைப்பவ
       னரியபுகழ் பாடியாடத்
தாளம் புடைப்பதற் கடியிட்ட தென்னநீ
       சப்பாணி கொட்டியருளே
தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே
       சப்பாணி கொட்டியருளே.
(1)