முகப்பு தொடக்கம்

 
ஊசல். எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
காண்டகைய விமிழிசைவெள் ளருவி தூங்குங்
       கவின்மயிலைச் சிவஞான தேவன் கூறும்
மாண்டகுநன் மொழிகேளா வாவி பாவ
       வல்வினையு நல்வினையு நின்று தள்ள
மீண்டுதுயர் நிரயமொடு துறக்க மேவி
       மெலிவதிவ்வா றெனத்திரிந்து காட்டல் போலத்
தூண்டுசுடர் விளக்கனையீ ரிரும ருங்குந்
       தோழியர்க ணின்றாட்ட வாடீ ரூசல்.
(37)