முகப்பு
தொடக்கம்
காமரை முனிந்த முனிவரர் புகுமெய்க்
கதியிடைப் புகவிடுத் திடினும்
பாமர னிவனென் றிருளினுய்ப் பினுநின்
பதமல ரன்றிவே றுளதோ
வாமரை பொருந்து முலகுள குவட்டு
மலைகள்போ லாதுணா முலையாந்
தாமரை பொருந்து மானுள்வாழ் சோண
சைலனே கைலைநா யகனே.
(81)