முகப்பு
தொடக்கம்
குன்றுதோ றாடுங் குமரனே யெனவுங்
கொடுஞ்சிலை மதனவே ளெனவும்
புன்றொழின் மனிதர்ப் புகழ்ந்துபாழ்க் கிறைக்கும்
புலமைதீர்த் தெனக்கருள் புரியாய்
ஒன்றொரு தினந்தோட் குட்குழைந் தனமென்
றுறாதுநா டொறுமக மேரு
தன்றலை தாழ்ப்ப வளர்ந்தெழுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(19)