|
குன்றவரி சிலைகொண்ட வெம்முடைய நல்லருட் குன்றமே தெய்வ மென்றுங் குறுகுமவ னடியவர் குழாத்தினுட் புகுவதே கூறரிய வீட தென்றும் மன்றுளுமை கண்குளிர நின்றுநட நவிலுமொரு வள்ளறிரு வஞ்செ ழுத்தே மந்திரம தென்றும்விட யப்பகை பொறுப்பதே வலியென்று முள்ள படியே நின்றுதனை மயலின்றி யுணர்கின்ற வுணர்வதே நிலையான வுணர்வ தென்று நெஞ்சினிறை யழியவெகு ளிக்கடுங் கனலெழா நிலையதே தவம தென்றுஞ் சென்றுவினை பொடியாக வருள்செயருண் மேகமே சிறுபறை முழக்கி யருளே சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே சிறுபறை முழக்கி யருளே.
|
(1) |
|