முகப்பு தொடக்கம்

குன்றலரு மருளாள னென்றமொழி நிற்குறிக்
       கொண்டுசெல் கின்றதெனவுங்
குறித்தொருவர் பாலென்ற வளவிலம் மொழிசென்று
       கோவமுதி னேர்தலெனவும்
நன்றினிய பழமென்ற வளவினெட் டிலைவாழை
       நற்கனியி னெய்தலெனவு
நாடாரும் பிள்ளையென் கின்றமொழி யாண்மகவி
       னண்ணுமா றெனவுமீசன்
என்றளவின் விடமெழுந் திடநடு நடுங்கிநிலை
       யின்றியிரி தருதேவரை
யெய்தாமன் மணிகண் டனைப்பொருந் துதலெனவு
       மிவணகர மென்பதுதனைச்
சென்றடையு மொருபெருங் கச்சிநக ராளிநீ
       சிறுதே ருருட்டியருளே
சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ
       சிறுதே ருருட்டியருளே.
(5)