முகப்பு தொடக்கம்

குருமணி மகுடம் புனைந்துல காளுங்
      கொற்றவ ராதலி னென்கட்
கருமணி யெனுநின் றொண்டர்குற் றேவல்
      கருதியாட் பட்டிட லினிதே
பெருமணி விசும்பி னுச்சியி னெழுந்த
      பிள்ளையங் கதிரென வரவந்
தருமணி யொளிவெண் மதியுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(95)