முகப்பு தொடக்கம்

 
பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கூடற் பதியிற் சமணிருளைக் குலைத்துத்
       திருவெண் ணீற்றதொளி
கொடுத்துக் கருத்திற் குடிபுகுந்தென் குலத்தைத்
       தொழும்பு கொளுங்கோவும்
ஆடற் பரியிற் சேரமா னணையக்
       கயிலைக் கிரிமீதி
லானைக் கழுத்தி லிவர்ந்தணையு மரசுந்
       திருநா வுக்கரசும்
நாடப் பசும்பொன் னிடைப்பதித்த நாக
      மணியிற் றமதுதமிழ்
நாட்டப் படுநின் றனதுதிரு நாமத்
       தினைப்புன் மதியாலென்
பாடற் பதிப்ப திரும்பிலதைப் பதிக்குந்
       தகைமை போலுங்காண்
பதியாய் வெங்கைப் பதியாளும் பகராக்
       கருணைப் பெருமாளே.
(58)